ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அருகே நேற்று காலை அந்நாட்டு விமான படைக்குச் சொந்தமான ஐஎல்-112 வி ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜின் பகுதியில் திடீரென தீ பிடித்தது. தீ பிடித்தபடியே சிறிது தூரத்துக்கு தாழ்வாக பறந்த விமானம் அங்குள்ள ஒரு வனப்பகுதிக்குள் விழுந்தது. தரையில் மோதிய வேகத்தில் அடுத்த சில நொடிகளில் விமானம் வெடித்துச் சிதறியது. இதில் வானுயரத்துக்கு கரும்புகை மண்டலம் எழுந்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ விமானம் தீ பிடித்தபடியே வானில் பறந்து பின்னர் வனப்பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்க
பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி
உக்ரைனுக்கு எதி
அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் மனித உரிமைகளுக்கான வழக
சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுல
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்க
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ
உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படு
ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு
மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இதன் தலைநகரான கவுதமாலா
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
