நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்கும் வகையில், தேசிய பணமாக்கும் திட்டத்தை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் அறிவித்தார். மத்திய அரசின் இந்த திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து உள்ளன. அந்தவகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா, மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மத்திய அரசு அனைத்து பணிகளையும் தனது கோடீசுவர நண்பர்களுக்காக செய்து வருகிறது, தற்போது அனைத்து சொத்துகளும் அவர்களுக்குத்தான்’ என சாடியுள்ளார். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் உருவாக்கிய லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அரசின் மூலம் தங்கள் கோடீசுவர நண்பர்களுக்கு வாரி வழங்கப்பட்டு வருகிறது என அவர் வேதனையும் தெரிவித்து உள்ளார்.
சுயசார்பை பற்றி வார்த்தை ஜாலமாக பேசி வரும் மத்திய அரசு, ஒட்டு மொத்த அரசையும் தங்கள் கோடீசுவர நண்பர்களை சார்ந்து இருக்கும் வகையில் மாற்றி இருப்பதாகவும் பிரியங்கா குறிப்பிட்டு உள்ளார்.
விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா
தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி
தமிழக சட்டமன்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது தேர
சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெ
பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், ம
ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற
