ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் அடுத்தடுத்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை பெறும் முதல் இந்திய பெண் வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிரஞ்சீவி, பி.வி.சிந்துவுக்கு விருந்துடன் கூடிய ஒரு பாராட்டு விழாவை நடத்தி உள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, சிரஞ்சீவி தனது நண்பர்கள் வட்டாரத்திலிருந்து பலரையும் அழைத்திருந்தார்.
குறிப்பாக தமிழ் நடிகைகள் ராதிகா சரத்குமார், சுகாசினி மணிரத்னம் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பி.வி.சிந்துவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், ஒலிம்பிக்கில் அவர் வாங்கிய வெண்கலப் பதக்கத்தை கையில் வைத்துக்கொண்டு சிந்துவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் து
இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்ப
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகிய
ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அட
பாக்கியலட்சுமி சீரியல் விஜய்யில் ஹிட் லிஸ்டில் இருக்
கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களி
கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்கு
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்
விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு
காமெடி காட்சிகளில் நடிக்க பலருமே முயற்சி செய்வார்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருட
நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலு
நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நட
நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் ப
